Thursday, June 30, 2011

நாம் நீதிகேட்டு வாதாடவும் போராடவும் தயங்காமல் தயாராகவுள்ளோம்: பைசர் முஸ்தபா

Best Blogger Tips
அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் கீழ் ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலை எதுவும் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்துள்ள தொழில்நுட்ப ஆராட்சி பிரதிமைச்சர் பைசர் முஸ்தபா 1000 பாடசாலைகளை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் ஒரு முஸ்லிம் படசாளையேனும் தெரிவு செய்யப்படாமை குறித்து முன்னெடுக்க படும் நடவடிக்கைகள் வெற்றி தராவிடின் நீதிமன்றம் சென்று நியாயம் கோரவும் தயங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் உரையில் ஜனாதிபதின் போதனை படி சகலருக்கும் சரிசமமான சேவைகள் செய்யப்படவேண்டும் தனிப்பட்ட ஒரு சாராருக்கு அநீதி இழைக்கப் படக்கூடாது. அதை நாம் அனுமதிக்க முடியாது அப்படி எதுவும் பட்சத்தில் நாம் நீதிகேட்டு வாதாடவும் போராடவும் தயங்காமல் தயாராகவுள்ளோம்  விரிவாக   ஊவா மாகாண முஸ்லிம் கல்வி தொடர்பான மலையக முஸ்லிம் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பிரதம அதீதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் உரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலம் நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு இக்கட்டான நிலையில் நான் அதிலிருந்து வெளியேறினேன் நான் நன்றி மறந்தவன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் என்னை திட்டியது ஒன்றும் தவறல்ல ஆனாலும் என் சமுதாயத்திற்கு நான் நன்றியுடையவனாக இன்று மலையகத்தில் 600 பேர் ஆசிரியர்களாக உருவாக்கபட்டுள்ளார்கள் இதற்கு நான் சந்தேசமும் திருப்பதியும் பெருமிதமும் அடைகின்றேன் .
நான் உள்ளிட்ட அமைச்சர் ரவூப் ஹகீம் , பிரதியமைச்சர் காதர், பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் ஆகிய நால்வரும் மத்திய மாகாணத்தில் , கண்டி மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவம் மூலம் நமது மக்களுக்காக பல்வேறு பணிகளை எம்மால் முடிந்த அளவு புரிந்து வருகின்றோம் .
உங்கள் ஊவா மாகாணத்தில் நியாயமான வாக்காளர் தொகை இருந்தும் கூட இரண்டு முஸ்லிம் பிரதிநித்துவம் தவரிவருகின்றமை துரதிஷ்டவசமானது நியாயமான வாக்காளர் தொகை இருந்தும் கூட ஊவாவின் வரலாற்றில் இதுவரை ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைக் பெற்றுகொள்ள முடியவிலை என்பது வருத்தமானது இது தொடர்பாக நாம் சமூக நோக்கம் கருதி தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றவேண்டும்.
முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை அப்படி உறுதியுடன் பதுளை மாவட்டத்தில் யாராவது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கி முதல் சாதனை படைக்கும் பச்சத்தில் நாம் நமக்காகவும் நமது சமுதாயதிற்காகவும் மிகுந்த பலனை மேலும் மேலும் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
News:Lankamuslim

0 comments:

Post a Comment