இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு குழுவினரை மாலைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு ஒபரேஷன் செலேனஜ் (Operation Challenge) என்ற பெயரில் முடுக்கிவிடப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமே இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து மாலைதீவிற்கு ஆகாயமார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டமை இந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவரென சந்தேகிக்கப்படும் இப்ராஹிம் சப்ராஸ் மற்றும் மூவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்குழுவினர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இப்போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் நாணயமாற்று முகவர் நிலைய ஒன்றின் உதவியின் ஊடாக பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலைதீவு பொலிஸார் சந்தேகநபர்கள் நால்வரையும் ஜூலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment