Saturday, October 22, 2011

சுட்டுக் கொல்லப்பட்டபோது கடாபி தங்க துப்பாக்கி வைத்து இருந்தார் (படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
சுட்டுக் கொல்லப்பட்ட போது கடாபி தங்க துப்பாக்கி வைத்திருந்தார். தங்க துப்பாக்கி கடாபி தனது சொந்த ஊரான சிர்த் நகரில் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது, அவர் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கி பழுப்பு நிறத்தில் இருந்தது. அதை அவர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். 

பொதுவாக கடாபிக்கு தங்கத்தின் மீது அலாதி மோகம் உண்டு. இவர் தனது மாளிகையில் ஏ.கே.47 துப்பாக்கியை தங்கத்தினால் தயாரித்து வைத்திருந்தார். பாப் அல்-அஷிசியா நகரில் உள்ள தனது வீட்டில் ஆயுதங்கள் அனைத்தையும் தங்கத்தினால் செய்து பாதுகாத்து வந்தார். தனது `ஷோபா' இருக்கையை மக்லி ஆயிஷா முக தோற்றத்தில் `கடல்கன்னி' உருவத்தில் தயாரித்து இருந்தார். இவை அனைத்தும் புரட்சிப்படை வீரர்கள் கைப்பற்றியபோது வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதேபோன்று தங்கத்தினால் ஆன ஆயுதங்களை ஈராக் அதிபர் சதாம் உசேனும் பயன்படுத்தி வந்தார். அவர் வழியை கடாபியும் பின்பற்றி உள்ளார்.











0 comments:

Post a Comment