Thursday, May 26, 2011

இன்டர்போல் பொலிசாரின் தேடப்படுவோர் பட்டியலில் மீண்டும் இணைந்து கொண்டுள்ள கே.பி.

Best Blogger Tips

இன்டர்போல் பொலிசாரின் தேடப்படுவோர் பட்டியலில் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின் பெயர் மீ்ண்டும் சோ்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தை விடுதலைப் புலிகளே திட்டமிட்டு மேற்கொண்டதாக அண்மையில் அவர் வழங்கியிருந்த பேட்டியொன்றே அவர் மீண்டும் இந்தியாவின் நீதிமன்ற தேடப்படுவோர் பட்டியலிலும் அதன் மூலமாக  இன்டர் போல் பொலிசாரின் தேடப்படுவோர் பட்டியலிலும் இடம்பிடிக்க காரணமாக அமைந்துள்ளது.
அதற்கு முன்பு சர்வதேச ஆயுதக்கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது பெயர் இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த போதும் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து அது நீக்கிக் கொள்ளப்பட்டிருந்தது.
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் புலிகளே கொன்றனர் என்று பரபரப்பான பேட்டியொன்றை இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் நீதிமன்ற தேடப்படுவோர் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்டர்போல் பொலிசாரும் தமது பட்டியலில் அவரது பெயரை மீளவும் உள்ளடக்கியுள்ளனர்.
 News:Lankasri

0 comments:

Post a Comment