Wednesday, May 25, 2011

உலக போரின் போது நாய்களுக்கு பேசும் பயிற்சி அளித்த ஹிட்லர்

Best Blogger Tips
ஜேர்மானியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். சர்வாதிகாரி ஹிட்லர் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார்.
இந்த பயங்கர நாய்கள் பேசும் நாய்களாக இருந்தன. இந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக் கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார்.
அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் வைத்திருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது. ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்ததோடு அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர்.
ஒரு நாள் தனது பாதங்களை தட்டி எழுத்துக்களை பேசியது. அது மதசம்பந்தமாகவும், கவிதையையும் கற்றுக் கொண்டது என செய்திகள் கூறகின்றன. ஜேர்மானியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும்.
மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment