Monday, May 30, 2011

அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இறுதி எச்சரிக்கை

Best Blogger Tips
அமெரிக்க படைக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி அறிவித்துள்ளார். அமெரிக்கப் படையின் வான்தாக்குதலில் பெண்கள்,  சிறுவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆப்கான் ஜனாதிபதி வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறேன், உங்கள் தேவையற்ற தாக்குதலால் ஆப்கான் பொது மக்களே கொல்லப்படுகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தாக்குதல்களால் மனித விழுமியங்களே மீறப்படுகிறது” என்று ஆப்கான் ஜனாதிபதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு நேட்டோ படை தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோட மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வவிகாரம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அது கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நவ்சாத் மாவட்டத்தில் அமெரிக்க படை நடத்திய தாக்குதலிலேயே இந்த சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இதன் போது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் ஆப்கான் குடியிருப்பு பகுதியிலேயே தாக்குதல் நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.

ஆப்கானில் யுத்தம் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் 2,777 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment