Sunday, June 19, 2011

சனல் 4 யுத்தக்குற்ற ஆவணப்படத்தை அரசாங்கம் ஆராயும் - ஹக்கீம்

Best Blogger Tips
“சனல் - 4” யுத்தக் குற்ற ஆவணப் படம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்குள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நீதிபதிகளுடனும் சட்டத்தரணிகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன் றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 
 
நீதியை நிலைநாட்டுவதில் எவருக்கு எந்தவிதமான அநீதியும் இழைக் கப்பட இடமளிக்காத வகையில், நேர்மையாக சகல அம்சங்களும் சீர்தூக்கி ஆராயப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தாம் உயர் அதிகாரிகளை பணித்துள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்
News:Yarlmuslim

0 comments:

Post a Comment