Sunday, June 19, 2011

பேஸ்புக்கில் ''வாடகைக்கு கொலையாளி'' தேடிய பெண் கைது

Best Blogger Tips
சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் மூலமாக முன்னாள் காதலனை படுகொலை செய்கின்றமைக்கு வாடகைக் கொலையாளி ஒருவரை தயார் செய்து இருக்கின்றார் அமெரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் தாய்.

இவரின் பெயர் லண்டன் எலே. இவருக்கு ஒரு வயது உடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது. முன்னாள் காதலன் குழந்தையை கொடுத்து விட்டு ஏமாற்றிக் கொண்டான். இதனால் ஆத்திரம் அடைந்த எலே முன்னாள் காதலனைப் படுகொலை செய்கின்றமைக்கு தீர்மானித்தார். பேஸ் புக் மூலமாக வாடகைக் கொலையாளி ஒருவரை தேடினார். 

எனது குழந்தையின் தகப்பனைக் கொல்கின்றவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்கிற தகவலை பேஸ் புக்கில் பிரசுரித்தார். 18 வயது உடைய இளைஞன் ஒருவர் வாடகைக் கொலையாளியாக கிடைத்தான். இவனின் பெயர் திமோதி பைனம். 

ஆனால் கொல்லப்பட இருந்தவரின் தாய் லண்டனின் பேஸ் புக் தகவலை படித்து இருந்தார். மகனை எச்சரித்தார். புலனாய்வாளர்கள் உஷார் அடைந்தனர். வாடகைக் கொலையாளியின் வீட்டை முற்றுகையிட்டனர். தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றை அவ்வீட்டில் இருந்து கைப்பற்றினர். லண்டன் எலே, வாடகைக் கொலையாளி திமோதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீண்ட கால சிறைத் தண்டனையை எதிர்நோக்குகின்றார்கள்.



0 comments:

Post a Comment