
ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின்- the Asian and African Legal Consultative Organisation- புதிய தலைவராக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்துள்ளார் . ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு கொழும்பு சினமன்லேக் சைட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது.
இச்சர்வதேச அமர்வை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற பிற்பகல் அமர்வின்போது இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்துள்ளார். நேற்று முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச அமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் விரிவாக
இந்த சர்வதேச அமர்வில் ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களிலுள்ள 47 நாடுகளின் இருநூறு பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். இவர்களில் ஒன்பது நாடுகளின் நீதியமைச்சர்கள், சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹிஸாஸி ஓவாடா, ஆறு நாடுகளின் சட்டமா அதிபர்கள் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவ்வமைப்பின் பதவி விலகிச் செல்லும் தலைவரான தன்ஸானியா நாட்டு அரசியல் விவகார, நீதியமைச்சர் செலினா கும்பானி அமைப்பின் தலைமைப் பொறுப்புக்களை அமைச்சர் ஹக்கீமிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.
News:Lankamuslim



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment