Friday, June 24, 2011

''புலிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் இராணுவ உயர் பதவிகளில்'' - பொன்சேக்கா

Best Blogger Tips
உயிரைப் பணயம் வைத்து நாட்டை மீட்டெடுத்த இராணுவ ஜெனரல்களை வீட்டுக்கு அனுப்பிய அரசு, புலிகளிடம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இதற்குப் பொறுப்பு கூறவேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் பதவி விலக வேண்டும்.  இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா  தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு  மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  நீதிமன்றினுள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு,

தொப்பிகலை உட்பட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உயிரைப் பணயம் வைத்து முழுமூச்சாக செயற்பட்ட இராணுவ ஜெனரல்களை அரசு வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மாதாந்தம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கியுள்ளது. எனவே, இவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பதவி விலக வேண்டும். இப்படி அவர் கூறினார்.             
News:Yarlmuslim

0 comments:

Post a Comment