Sunday, June 19, 2011

தந்தை இல்லாமல் வளருவது ஏக்கம் நிறைந்தது - தந்தையர் தினத்தில் ஒபாமா

Best Blogger Tips
தந்தையர் தினம் உலகம் முழுவதும் ஒரு தொகையினரால் கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமாபேட்டி அளித்தார். அதில் ஒபாமா கூறியதாவது, நான் சிறுவனாக இருக்கும் போது என் அப்பா பிரிந்து சென்று விட்டார். அதனால் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தேன். அப்பா இல்லாமல் வளர்ந்தது பெரிய ஏக்கமாக இருந்தது. 

அவர் என்னுடன் இருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என நினைத்து ஆச்சர்யப்படுவேன். என் குழந்தைகளுக்கு நான் பொறுப்பான தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் முடியவில்லை. தந்தையாக இருப்பது எனக்கு கஷ்டமான வேலையாக உள்ளது. அதிபராக இருப்பதால் நான் பெரும்பாலும் வீட்டை விட்டு பிரிந்தே இருக்கிறேன். 

என் மகள்கள் மலியா மற்றும் ஷாசாவை வளர்க்க வேண்டிய பொறுப்பை பெரும்பாலும் என் மனைவி மிஷேலே கவனிக்கிறார். குழந்தைகளுக்கு எப்போதும் பெற்றோரின் அன்பு தேவை. அவர்கள் வெற்றியடைந்தாலோ அல்லது தவறு செய்தாலோ நாம் ஆதரவாக இருக்க வேண்டும். தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
News:Yarlmslim

0 comments:

Post a Comment