Saturday, October 29, 2011

பேஸ் புக்' மூலம் சட்ட விரோத செயற்பாடு கடந்த 10 மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள்

Best Blogger Tips
பேஸ் புக்' சமூக வலைத்தளத்தின் மூலம் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகக் கடந்த 10 மாதக் காலப்பகுதியில் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போலியான தகவல்களை கொண்டு "பேஸ் புக்' கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் அடுத்தவரின் அனுமதியின்றி அவர்களின் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் தொடர்பாகவே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சட்டவிரோதமான முறையில் இரகசிய குறியீட்டு இலக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு அந்த கணக்குகளுக்குள் ஊடுருவல் மற்றும் கப்பல் பெற முயற்சித்த சம்பவங்கள் தொடர்பாகவும் அந்தக் குழுவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் முறைப்பாடுகளை கிடைத்துக்கொண்டிருப்பதாகவும் முøற்பாடுகள் தெரிவிப்போர் பொலிஸாரிடமும் தெரிவிக்க முடியுமெனவும் கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவு தெரிவித்துள்ளது.


News: Thinakural

0 comments:

Post a Comment