உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் மாத்தளை நகரை அழகுபடுத்திடும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை மாநகர மேயர் ஹில்மி முஹமமத் கரீம் தெரிவித்துள்ளார். மாத்தளை மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாம் முறையாகவும் மாநகர மேயராக பதவியேற்றதைத் தொடர்ந்து மாநகர முதல்வரின் நேரடி கண்காணிப்பில் மாத்தளை மாநகரை அழகுப்படுத்திடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உக்குவளை இராணுவ முகாமைச் சேர்ந்தோர், மாத்தளைப் பொலிஸார், மாநகர சபை ஊழியர்கள் நலன் விரும்பிகள் என பலர் இந்த பணியில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் விசேடமாகத் தேர்தல்களில் மாத்தளை நகர முழுவதும் நகரின் சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் ஒட்டப்பட்டிருந்த பெனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள், விளம்பர பதாகைகள் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டு வருகின்றன. வடிகால்கள் அனைத்தும் முழுமையாக சுத்தப்படுத்தப்படுகின்றன.
இனிவரும் காலங்களில் மாத்தளை நகரில் கண்ட கண்ட இடங்களில் போஸ்ட்டர்கள், பெனர்கள், விளம்பர பதாகைகள் தொங்கவிட முடியாது. இதற்கென மாத்தளை நகரில் சில இடங்கள் ஒதுக்கப்படும். அந்த இடங்களைத் தவிர வேறு இடங்களில் போஸ்ட்டர்கள், விளம்பரங்கள் ஒட்டப்படுவதுink முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவை மீறி செயற்படுவோர் மீது தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென மாத்தளைப் பொலிஸாருடன் இணைந்து செயற்படவென ஒரு கண்காணிப்புக்குழுவை இயங்க வைக்கவுள்ளோம்.
எதிர்வரும் டிசம்பர் மாத முடிவுக்குள் இச்சுத்திகரிப்புப் பணிகள் முடிவடைவதுடன் மாநகர அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஹில்மி கரீம் மேலும் தெரிவித்தார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment