சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையின் போது ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் பரீட்சையின் போது நாமல் ராஜபக்சவிற்கு காற்று சீராக்கியுடன் கூடிய விசேட அறை ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சட்டக் கல்லூரியின் வேந்தர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்குத் தொடரும் அளவிற்கு போதியளவு காரணிகள் மனுவில் குறிப்பிடப்படவில்லை என நீதவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நுகேகொட எதிரிசிங்க வீதியைச் சேர்ந்த டி.எம். துசார குமார என்பவரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment