Thursday, November 3, 2011

பாடசாலை நேரத்தை 3 மணி வரை நீடிப்பது குறித்து ஆலோசனை

Best Blogger Tips
பாடசாலை நேரத்தைப் பிற் பகல் மூன்று மணிவரை நீடிப்பதற்கான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும். தற்போதும்கூட நாட்டிலுள்ள சில அரச பாடசாலைகளில் 3 மணிவரை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு.

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை நேரமாகும். இந்த நிலையில், மாணவர்களின் நன்மை கருதி பாடசாலை நேரத்தை 3 மணிவரை அதிகரிக்க அமைச்சு பேச்சுகளை முன்னெடுத்தது.

எனினும், அது தொடர்பாக இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. விரைவில் அது குறித்தான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். நாட்டின் சில பகுதிகளிலுள்ள அரச பாடசாலைகள் பிற்பகல் 3 மணிவரை திறந்திருக்கின்றன. 3 மணிவரை மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அதேபோன்று மாணவர்களின் நன்மை கருதி பாடசாலை கல்வி நேரத்தை மாலை 5 மணிவரையிலும் அதிகரிப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு உண்டு.

பாடசாலை அதிபர்கள் விரும்பினால், மாலை 5 மணிவரை பாடசாலையை திறந்துவைத்திருந்து மாணவர்களுக்குக் கற்பித்துக் கொடுக்கமுடியும். இவை அனைத்தும் மாணவர்களின் நன்மைக்கே என்றார் அமைச்சர். 

0 comments:

Post a Comment