இலங்கையிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிருந்தோ இணையத்தளங்களுக்குச் செய்திகளை தரவேற்றம் செய்யும் இணையத்தளங்கள் இலங்கை மற்றும் எமது நாட்டு மக்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் அவதானமாக இருக்குமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல இணைய தளங்களில் தம்மைப் பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் களங்கம் ஏற்படுத்தக் கூடிய செய்திகள் வெளிவருவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அமைச்சுக்கு புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில தனிப்பட்ட நபர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை இந்த இணைய தளங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இந்த இணையத்தளங்களில் காணப்படும் சில விடயங்கள் நாடு, நாட்டின் தலைமைத்துவம் அமைச்சர்கள் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், மிக மிக முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன.
இது தொடர்பாக அமைச்சு மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளமையானது என்னவெனில், பல இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையும் நாட்டின் சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளன. இணைய தளங்களின் இந்த செயல்பாடானது அரசுக்கும், நாட்டின் தலைமைத்துவத்துக்கும், ஏனையவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று அமைச்சு கருதுகிறது.
இந்த இணையத்தளங்களின் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், உரிமையாளர்கள் என்போர் பத்திரிகைத் துறையின் ஒழுக்கம், தனிப்பட்டோரின் உரிமை, பாதுகாப்பு என்பனவற்றை குறிவைத்தே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அமைச்சு செய்திகளை வெளியிடும் எல்லா இணைய தளங்களும், ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதி செய்யப்பட்ட நாட்டின் சட்டத்துக்கு அமைவான விடயங்களை மட்டுமே தரவேற்றம் செய்யுமாறு கோருவதற்கு எண்ணியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு
திருமதி கே. டபிள்யூ. டி. என். அமரதுங்க, மேலதிக செயலாளர் (டிவலொப்மென்ட் அன்ட் பிளேனிங்)
தொலைபேசி : +94112513943. பெக்ஸ் : + 94112512343.
email : amaratungamedia@yahoo.com, secretary@media.gov.lk அல்லது இணையத்தளம்: www.media.gov.lk என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ள லாமென அறிவிக்கப்படுகிறது.- தகவல் தினகரன்




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment