Wednesday, November 2, 2011

துமிந்த சில்வா வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்! மேலதிக சிகிச்சைக்காக ஆஸி.க்கு அனுப்ப முடிவு

Best Blogger Tips
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு 8.30 மணியளவில் துமிந்த சில்வாவை வைத்தியசாலையிலிருந்து விடுவித்ததாக ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறவினர்களின் வேண்டுகோளுக்கு அமைய இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சசேந்திரா கமகே தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறிச் செல்லக் கூடிய நிலையில் துமிந்த சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்கு அனுமதியளிக்குமாறு துமிந்தவின் உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவர் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலதிக சிகிச்சைக்காக அவர் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனத் தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் திங்கட்கிழமை துமிந்த சில்வாவை

0 comments:

Post a Comment