Friday, May 20, 2011

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தையே கட்டுப்படுத்தியது! போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

Best Blogger Tips
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக எவர் குற்றம் சாட்டினாலும்அதில் உண்மையில்லை.
பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களைப் படு கொலை செய்யும்போது எந்தவொரு அரசாங்கமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
விடுதலைப் புலிகளுக்கெதி ரான போரில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக வெளியாகியுள்ள ஐ.நா. அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடுகம புத்தரக்கித தேரர் மேற்கண்ட வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மனிதாபிமான அடிப்படையிலேயே அரசாங்கம் பாதுகாப்புப் படையினரும் முன்னெடுத்திருந் தனர். அதன்போது தமிழ் சிவிலியன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வில்லை என்றும் அவர்  கூறியுள்ளார்.

News:Meelparvai

0 comments:

Post a Comment