
கொழும்பு மாநகர சபை புதிய மேயர் தனது கடமைகளை பொறுப்பேற்பதை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பதவிப் பிரமானம் செய்தவுடன் முஸம்மில் தமது கடமைகளைப் பொறுப்பேற்க விரும்பியதாகவும் அதற்கு அரசாங்கம் தடை விதித்ததாக தெரிவித்துள்ள ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர சபை இன்னும் விசேட ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. இது பாரதூரமானதாகும் எனவும் கூறியுள்ளார்.
ரவி கருணாநாயக்க எம்.பியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பேசிய உள்ளூராட்சி பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, இத்தகைய பிரச்சினை குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இத் தேர்தலில் மக்களின் அபிப்பிராயத்திற்கு அரசாங்கம் தலைவணங்குவதாகவும் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. எவ்வித பிரச்சினையுமின்றி நிர்வகிக்க அரசாங்கம் உதவி செய்யும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைத்து ஐ.தே.கவின் பண்டாரவளை மாநகர சபை மேயரை அரசாங்கம் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியதற்கு இது தொடர்பாக முறையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் இவ்விடயத்தை ஆராய்ந்து பார்க்கத் தயார் எனவும் அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க பதிலளித்துள்ளார்.
News: Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment